ஆஸ்திரேலிய நீதிமன்றில் அண்மையில் ஒரு வித்தியாசமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாதெனில் உயிரணு தானம் செய்தவர் தான் குழந்தையின் சட்டப்பூர்வ தந்தை என அவுஸ்திரேலிய உச்சநீதிமன்றம் பரபரப்பான இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்வதற்காக 2006-ம் ஆண்டு உயிரணுக்கள் தானம் செய்துள்ளார். இதன்மூலம், பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கிடையிலான நட்பு முறிந்ததுள்ளது . எனினும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில், அந்த ஆணின் பெயர் ‘பெற்றோர்’ என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
பின்னர் தோழி, குழந்தையுடன் நியூசிலாந்து செல்ல முடிவு செய்தார். இதனால் அதிருப்தி அடைந்த அந்த நபர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், குழந்தையின் உயிரியல் தந்தையாக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும், குழந்தையுடன் தனது மனைவி நியூசிலாந்து செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரணு தானம் செய்திருப்பதை வைத்து, மனுதாரர் குழந்தையின் தந்தை என உரிமை கோர முடியாது என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், உயிரணு தானம் செய்தவர்தான், குழந்தையின் தந்தை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.