தாதியர்களுக்கான பல்கலைகழகத்தில் அடுத்த வருடம் முதல் பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்படுமென பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 17 கல்லூரிகளை ஒன்றினைத்து தாதியர்கள் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழகத்தின் மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார். தாதியர் பட்டப்படிப்புக்கான கல்வி திட்டங்களை வகுக்கும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கமைய வருடாந்தம் 3 ஆயிரம் பட்டதாரி தாதியர்களை உருவாக்க முடியுமென பேராசிரியர் ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.