கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டி பகுதியில் கொரோனா தொற்றுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த 154 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிந்துப்பிட்டி பகுதியில் கொரோனா தொற்றுடையவராக அடையாளம் காணப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையென தெரியவந்துள்ளது. இறுதியாக மேற்கொள்ளப்பட்ட 5 பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர், அவரின் உடலில் கொரோனா வைரஸ் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதா சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், அவருடன் நெருங்கிப்பழகிய நிலையில் கந்தாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 154 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.