பொகவந்தலாவை குயினா மேற்பிரிவு தோட்டத்தில் 17 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்றையதினம் சம்பவம் பதிவாகியுள்ளது. சிறுமியின் தாய் தொழில் நிமித்தம் பொகவந்தலாவை நகர் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியை கண்ணுற்றுள்ளார்.
தாய் கண்டித்தமையினால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக சிறுமி கடிதமொன்றையும் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.