விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கொபெய்கனே- விதிகுளிய சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதனாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 38 வயதுடைய மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவரே விபத்தில் பலியாகியுள்ளார்.இவர் நிக்கவரெட்டிய பகுதியை சேர்நதவராவார்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.