கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்காக விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதி அட்டைகளில் பிரச்சினைகள் காணப்படுமெனில் அதுகுறித்து உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சகல பரீட்சார்த்திகளுக்குமான அனுமதி அட்டைகள் கடந்த வெள்ளிக்கிழமை தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாஸ் தெரிவித்தார்.