ஆப்கானிஸ்தானில் இராணுவ ஹெலிகொப்டரொன்று விழுந்து நொறுங்கியதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். டாரா மாகாண மலைப்பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. நிலவும் சீரற்ற வானிலையே விபத்துக்கு காரணமென தெரியவந்துள்ளது. பரா மாகாண சபை தலைவர், இராணுவ அதிகாரிகள் உட்பட 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான விசாரணைகளை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.