இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்கின்றது.
தமிழகத்தில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை சிங்கி வலை குச்சி கடல் பகுதியில் கடத்தல் தங்க கட்டிகளை இன்று திங்கட்கிழமை (26) ஐந்தாவது நாளாக தேடி வருகின்றனர்.
தொடர்ந்து இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில் தங்கம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், வட மாநிலத்தில் இருந்து கடலுக்கு அடியில் பொருட்களை தேடும் ஸ்கேனர் கருவி வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் இன்றைய தினம் ஐந்தாவது நாளாக கூபா வீரர்களை கொண்டு கடலுக்கு அடியில் தங்க கட்டிகளை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
