ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாரஹென்பிட்டியில் உள்ள வீடமைப்பு அபிவிருத்தி சபையின் காரியாலயத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் சேவையை பெற்றுக்கொள்ள சென்ற ஒருவர் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமையவே ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளது.
விசேட தேவையுடைய நபர் ஒருவர் நாரயன்பிட்ட பிரிவில் உள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் காரியாலயத்தில் சேவையை பெற்றுக் கொள்ள வருகை தந்திருந்த நிலையில் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி அவதானித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்திற்குள் சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் பல்வேறு விடயங்களை கேட்டறிந்தார். குறித்த அலுவலகத்திற்கு இரண்டு சந்தரப்பங்களில் வருகை தந்த பெண்ணொருவர் சேவையை பெற்றுக் கொள்ளமுடியாமை தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்டிருந்தார். குறித்த பெண்ணையும் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். போதியளவு ஊழியர்கள் இல்லாமையினால் சேவையை வழங்க முடியாத நிலையில் உள்ளதாக அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் தெரிவித்ததாக குறித்த பெண் அதன்போது குறிப்பிட்டார். எனினும் அங்கு குறிப்பிடத்தக்களவு ஊழியர்கள் உள்ளமையை ஜனாதிபதி அவதானித்தார்.
பொதுமக்களுக்கான தேவைகளை துரிதமாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் நிறைவேற்றுவதே அரச ஊழியர்களின் அடிப்படை பொறுப்பாகுமென ஜனாதிபதி அதன்போது ஊழியர்களுக்கு தெளிவுப்படுத்;தினார்.