கொரோனா வைரஸ் தொற்றி தொற்றுநோய் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்ற சீன பெண் முற்றாக குணமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறவிருந்தபோதிலும் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ பரிசோதனைகளின் படி அவர் முற்றாக குணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 27ம் திகதி தொற்று நோய் மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இப்பெண் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது கொரோனா வைரஸ் தொற்றியவராக வரலாற்றில் இணைந்து கொண்டார்.
சுகாதார தரப்பினர் உடனடியாக செயற்பட்டு மிக பாதுகாப்பான முறையில் அவருக்கு சிசிக்சையளித்தனர். தொற்று நோய் மருத்துவ நிலையத்தில் இவ்வாறு வெற்றிகரமாக சிகிச்சையளித்த போதிலும் தேவையான மருத்துவ பரிசோதனைகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் துரிதமாக மேற்கொண்டது. இலங்கை மருத்துவ முறையின் ஊடாக குணமடைந்த இந்த சீன பெண் இன்றிரவு தாயகம் திரும்பவுள்ளதாக தெரியவருகின்றது. அவரது சுகாதார நிலை தொடர்பாக இறுதி அறிக்கைகள் சில கிடைக்கவிருப்பதாகவும் அவ்வனைத்து அறிக்கைகளுடன் அவர் தாயகம் திரும்புவதற்கான வசதிகளை செய்து கொடுக்க சுகாதார தரப்பினர் எதிர்பார்த்துள்ளனர். இன்றைய தினம் முடியாவிட்டாலும் விரைவில் அவருக்கு சீனா செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
இதேநேரம் இலங்கையில் கொரோனா தொற்றியதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 15 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலை சாதக நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் மருத்துவ பிரிவின் பிரதம தொற்று நோய் மருத்துவ அத்தியட்சகர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து தியத்தலாவ இராணுவ முகாமில் விசேட சிகிச்சை பிரிவில் தங்கியிருந்த மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர கருத்து வெளியிடுகையில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து தியத்தலாவ இராணுவ முகாமில் தங்கியுள்ள 33 பேரின் உடல் நிலை தேரி வருவதாகவும் எதிர்வரும் சனிக்கிழமை அவர்களுக்கு தத்தமது வீடுகளுக்கு செல்ல முடியுமென சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் நாளை மறுநாள் இராணுவ தலைமையகத்தில் தாம் பெற்ற அனுபவங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கவுள்ளனர்.