மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையை அடுத்து காஷல் ரீ மற்றும் மௌசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. குறித்த இரு நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் வான் பாயும் எல்லையை அண்மித்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியிலாளர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக மத்திய மலை நாட்டில் மேற்கு சரிவுப்பகுதிகளில் காணப்பட்ட வரட்சியான காலநிலை காரணமாக இந்நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நூற்றுக்கு 20 வீதமாக குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.