இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 76வது பிறந்த தினமாகும். தனது அறை நூற்றாண்டு அரசியல் வாழ்வில் இரண்டு முறை ஜனாதிபதியாகவும், 4 தடவைகள் பிரதமராகவும் பதவி வகித்துள்ள அவர் நாட்டுக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த தலைவராவார். 1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியலுடனான தொடர்பு சிறு வயது முதலே ஏற்படுகின்றது. ராஜபக்ஷ பரம்பரை ஆசிர்வாதத்துடன் தனது 25வது வயதில் தேர்தல் களத்தை சந்திக்கும் அவர் 1970ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பெலியத்த தேர்தல் தொகுதியில் 23 ஆயிரத்து 103 வாக்குகளை பெற்ற வெற்றிக்கொள்கின்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் 16 ஆயிரத்து 477 வாக்குகளையே பெற்றுக்கொண்டார். அவ்வாறு மிகப்பெரு வெற்றியுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் மஹிந்த ராஜபக்ஷ குறித்த காலப்பகுதியில் தெரிவான இளம் உறுப்பினர் என்ற சாதணைக்கு சொந்தக்காhரர்.
தனது அரசியல் பயணத்தில் தொடர் வெற்றிகளை பெற்றுக்கொண்ட அவர், ஒரு சில தோல்விகளையும் சந்தித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சரவை அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, பிரதமராக செயற்பட்டது மாத்தரமன்றி நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அரசியல் வாழ்வில் உச்சத்தை அடைந்தார். அறைநூற்றாண்டு கொண்ட அவரது அரசியல் வாழ்வில் நாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த கௌரவம் அரவது தலைமைத்துவத்திலேயே இடம்பெற்றது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமை மாத்திரமன்றி நாட்டின் அபிவிருத்தி யுகத்தை ஆரம்பித்து வைத்தவரும் மஹிந்த ராஜபக்ஷவே. மக்களின் பேரபிமானத்தை பெற்ற மஹிந்த ராஜபக்ஷ 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்தித்த போதும் மீண்டும் மக்களின் ஆசிர்வாதத்துடன் நாட்டுக்கு தலைமை வகிக்கக்கூடிய பிரதமராக 4வது முறையகவும் தெரிவு செய்யப்பட்டார். இன்று நாட்டுக்கு வழங்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவம் நிகழ்காலத்தை விட எதிர்காலத்திற்கு பெறுமதி வாய்ந்ததாக அமையும். இன்றைய பிறந்த தினத்தில் சுயாதீன ஊடக வலயமைப்பு என்ற அடிப்படையில் தொடர்ந்தும் பெறும் பலத்துடன் நாட்டுக்கு உங்களது தலைமைத்துவம் கிடைக்கப்பெறவேண்டுமென வாழ்த்துகிறோம்.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு ஆசி வேண்டி இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் பம்பலப்பிட்ட புதிய கதிரேசன் ஆலயத்தல் அதிகாலை 5.30 மணிக்கும், காலை 7 மணிக்கும் விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநெறி பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கு நூல்களை வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாந்தி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கல் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.