நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு இடியுடன் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் இரவில் மழை பெய்யலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.