கன்றுகுட்டிகளுடன் 22 மாடுகளை லொறியொன்றில் ஏற்றிச் சென்ற லொறியொன்று மிஹிந்தலை ரபேவ பகுதியில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டள்ளது.
அனுராதபுரம் பொலிசின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் குறித்த லொறி முற்றுகையிடப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமன்றி மன்னார் அடம்பன் பகுதியிலிருந்து பேருவளை நோக்கி மாடுகளை கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி உட்பட உதவியாளர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.