மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணத்தை வழங்கும் பொருட்டு அரசாங்கம் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவினை செலவிடவுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துள குணவர்தன தெரிவித்துள்ளார்.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின் கட்டணமாக பெப்ரவரி மாத்தில் செலுத்தப்பட்ட தொகையினை அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துள குணவர்தன குறிப்பிட்டார்.
ஏற்கனவே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின் கட்டணத்தை செலுத்தி இருந்தால் மேலதிக பணம் அடுத்த மாத மின் கட்டணத்தில் குறைக்கப்படுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. தந்போது இந்நடவடிக்கையளினை செப்டம்பர் மாதம் வரை முன்னெடுத்து செல்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துள குணவர்தன தெரிவித்தார்.
