10 இலட்சம் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் இன்று முற்பகல் ஆரம்பமாகவுள்ளது. ‘மலரும் நாட்டில் வளரும் மரம்’ என இவ்வேலைத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இன்று காலை சுபவேளையில் அனுராதபுரம் மஹமெயுனா உயன் வளாகத்தில் இதன் ஆரம்பநிகழ்வு இடம்பெறவுள்ளது. இதற்கிணைவாக நாடுமுழுவதும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.