உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்ஸிஸ், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவிப்பதாக பாப்பரசர் பிரான்ஸிஸ் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் துரிதகதியில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் பாப்பரசர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். தாக்குதலில் பாதிப்படைந்துள்ள அனைவரது சுபிட்சத்திற்காகவும் தான் விசேட பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளதாக பாப்பரசர் பிரான்ஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.
குரோதத்தால் வன்மமடைந்த இதயங்களில் சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்படட்டுமென பாப்பரசர் பிரான்ஸிஸ், கர்தினால் மெல்கம் ரஞ்சித ஆண்டகைக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.