சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் மலைக்குச் செல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுமென சப்ரகமுவ மாகாண பிரதம சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன குறிப்பிட்டுள்ளார். நல்லதண்ணி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் உள்ளுர் சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாதமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் சுற்றுச் சூழல் பாதிப்பை கவனத்திற்கொண்டு இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் வெசாக் பூரணை தினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.