எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிருலப்பனை மயூரா கோவிலில் இடம்பெற்ற வழிபாடுகளில் கலந்துகொண்டதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இதன்போது பதிலளித்தார்.