அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கறுப்பின பிரஜையான ஜோர்ஜ் புளொய்டின் இறுதிக்கிரியைகள் இன்று ஹூஸ்டனில் இடம்பெறவுள்ளன. கடந்த மாதம் 25 ம் திகதி அமெரிக்காவில் பொது இடமொன்றில் வைத்து ஜோர்ஜ் புளொய்டின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் முழங்காலை அழுத்திய நிலையில் அவர் உயிரிழந்தார். அதனையடுத்து அமெரிக்க பொலிசாரின் வன்செயலைக் கண்டிக்கும் வகையில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புயொய்டின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி டெரிக் ஷார்வின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் மீது இரண்டாம் நிலை கொலை உட்பட 3 கடுமையான குற்றச்சாட்டுக்கள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு விசாரணை இடம்பெற்ற காலப்பகுதியில் ஷார்வின் அமைதியாக இருந்ததாகவும் எந்தவொரு தகவலையும் வழங்கவில்லையெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.