பேருவல பிரதேச மக்களுக்கு ஆலோசனைகள் பல வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் நடவடிக்கைள் தொடர்பில் கண்காணித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவ தளபதி குறிப்பிட்டார். இந்நிலையில், அட்லுகம கிராமம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கும் சிலர் அழைத்து செல்லப்பட்டனர். குறித்த கிராமத்தில் இருந்து மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்றுமுன் தினம் சுற்றுலா வழிக்காட்டி ஒருவரின் மாமா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், அடையாளம் காணப்பட்டார். குறித்த மாமாவின் மனைவி நேற்றைய தினம் 21வது தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். மேலும் மூவர் பேருவலை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேருவல பகுதி தனிமைப்படுத்தப்படவில்லை. எனினும் அங்குள்ள மக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவர்களில் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவ தளபதி வெப்டினல் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.