கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்டத்தில் தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக பிரதி பணிப்பாளர் நாயகம் தரத்திற்கு வைத்தியரொருவரை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன இது தொடர்பான பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். குறித்த பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.