பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் திருத்தப்பட்ட பெறுபேறுகள் அட்டவணையில் வெளியிடப்பட்டதன் பின்னர் பயிற்சி வைத்தியர்களுக்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்படுமென சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை தெரிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அதி சிறந்த சித்தியெய்தோரின் பட்டியலில் சிறு மாற்றங்கள் இடம்பெற வேண்டுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக பெறுபேறுகளின் தகவல்களை சேர்க்கும் போது ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணமாகும்.
2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு மாணவர்களின் பெறுபேறுகளை துரிதமாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தாமதத்தினால் ஏற்பட்ட தவறுகள் திருத்திக் கொள்ளப்பட்டதன் பின்னர் பயிற்சி வைத்தியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுமென சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லால் பனாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.