இன்று முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக இன்று பிற்பகல் 12.13 ற்கு நயினாதீவு, மருதங்கேணி, பளை, மருதடிக்குளம், அல்லப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மிக அருகாமையில் சூரியன் காணப்படும்.
ஏதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வரையில் சூரியன் இலங்கைக்கு அண்மித்த வகையில் நேரடியாக நகரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நாட்டில் குறிப்பிட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.