எல்ல, கரந்தகொல்ல மண்சரிவு அபாயத்தை குறுகிய காலத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் காணப்படும் மண்சரிவு அபாயம் தொடர்பில் கண்காணித்ததை தொடர்ந்தே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையெ, எல்ல வெல்லவாய வீதியின் கரதகொல்ல – மலித்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதி தொடர்பில் ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இணங்கியுள்ளது.
குறித்த பகுதியின் உறுதியற்ற தன்மையை அடையாளங்கண்டு அதனை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட முடியும் என பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் இந்த அறிக்கையினூடாக வழங்கப்படவுள்ளது.
மண்சரிவுக்கும் , உமா ஓயா நிலத்தடி நீர் வழித்தடத்துக்கும் தொடர்பு உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவியதால், நீர் ஆதாரம் ஆய்வு செய்யப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.