மன்னார் – முத்தரிப்புத்துறை பகுதியில் படகின் இயந்திரத்திலுள்ள காற்றாடியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தொழிலுக்கு சென்றவேளை படகின் இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் சிலாவத்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.