கொழும்பு, சங்கராஜ மாவத்தைக்கு அருகில் உள்ள விகாரை ஒன்றின் அரச மரக்கிளையே முறிந்து விழுந்துள்ளது.
இதன்போது லொறி ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து காரணமாக அந்த இடத்தை சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.