நாட்டிலுள்ள போஷாக்கு குறைந்த 40 ஆயிரம் சிறுவர்கள் தொடர்பில் விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 21 ஆயிரம் சிறுவர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபா வீதம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தயாசிறிய ஜயசேகர எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்;டார். சிறுவர்களுக்கான போஷணை திட்டம் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு உதவ பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஒரு நிறுவனம் ஆயிரம் சிறுவர்களை பொறுப்பேற்க இணக்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் தாய்மார்களுக்கான திட்டம் போன்றதொரு திட்டமே நடைமுறைப்படுத்தப்படும். திரிபோஷா விநியோகத்திற்காக 12 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.