இன்றைய தினம் பாராளுமன்றம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்றைய தினமும், நாளைய தினமும் எவ்வித எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கப்போவதில்லையென தெரிவித்துள்ளபோதும், பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றமையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பாராளுமன்றத்தை சூழவுள்ள வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் அவசரகாலநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சகல பகுதிகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்திற்கு சென்றனர்.