மின்வெட்டை அமுல்ப்படுத்தாது தொடர்ச்சியான மின்விநியோகத்தை வழங்க முடியுமென அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான சகல வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு தேவையான எரிபொருள் இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்சார சபையின் பொறியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.