நாட்டில் நேற்றைய தினம் 338 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்; கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 862 ஆக உயர்வடைந்துள்ளது. அதில் 85 ஆயிரத்து 725 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
2 ஆயிரத்து 600 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 305 பேர் நோய் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் விசேட வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டில் இதுவரை 537 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை முப்படையினரால் நடத்திச்செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 11 ஆயிரத்து 644 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 237 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.