பெரும்போகத்தில் நெற்கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
3 இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்காக 16 ஆயிரத்து 655 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய தரத்திலான ஒரு கிலோ கிராம் சம்பா மற்றும் கீரி சம்பாவை 52 ரூபா உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே தரமான நாடு உள்ளிட்ட ஏனைய ரக நெல் 50 ரூபா உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யப்படும். 14 சதவீதத்திலும் கூடுதலாக ஈரழிப்பு காணப்படுகின்ற அல்லது 22 சதவீதத்தை விடவோ அதற்கு குறைந்த ஒரு கிலோ சம்பா மற்றும் கீரி சம்பா 46 ரூபா உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யப்படும்.
இதே வகையான நாடு உள்ளிட்ட ஏனைய ரகங்களை உடைய ஒரு கிலோ நெல் 44 ரூபா உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முறை பெரும்போகத்தில் வடமேல் பிராந்தியத்தில் நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வலயத்தில் இம்முறை சுமார் 40 மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிராந்தியத்துக்கு பொறுப்பான பிpராந்திய முகாமையாளர் ரசிக்க மெரங்க தெரிவித்துள்ளார். இப்பிராந்தியத்திற்குள் புத்தளம், குருநாகல், கம்பஹா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன.