அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. வரவு செலவு திட்டம் இரண்டாம் முறை வாசிப்பையடுத்து அதற்கான வாக்கெடுப்பு கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றதுடன், அது 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இது நாட்டின் 75வது வரவு செலவு திட்டமாகும். வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகள் மாத்திரமே கிடைத்ததன. இன்று நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பிலும் வரவு செலவு திட்டமானது அதை விட கூடுதலான மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்படுமென அலசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அபிவிருத்திக்கு முன்னுரிமையளித்து சமர்ப்பிக்கப்பட்ட இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா வழங்கவும் அரச ஊழியர்களுக்கு கட்டாய நேரத்திற்கு பின்னர் மேலதிக தொழில் ஒன்றில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.