தனிமைப்படுத்தப்படுகின்ற குடும்பங்களுக்காக 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வேலைத்திட்டமும் வாழ் வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா வழங்கும் வேலைத்திட்டமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
பொலன்னறுவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 148 குடும்பங்களுக்காக 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. இம்மாவட்டத்தின் 7 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக இப்பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவிக்கின்றார். இதற்கென அரசாங்கம் 7 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காகவும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்தும் வழங்கப்படுகின்றன. கடவத்சத்தர பிரதேச செயலகப்பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 52 குடும்பங்களுக்காக இவை வழங்கி வைக்கப்பட்டன.
குருநாகல் ஜயந்திபுர பகுதியில் ஜீவனோபாயத்தை இழந்த குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. குருநாகல் நகர பிதா துஷார சஞ்சீவ மற்றும் பிரதேச செயலாளர் ஈ.எம். ஏக்கநாயக்க தலைமையில் இவை வழங்கப்பட்டன.
அட்டாளச்சேனை பிரதேசத்தில் சுமார் 5 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 25 குடும்பங்களுக்கான 5 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன. .