நாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளை ஆகஸ்ட் மாதம் 10 ம் திகதி திறக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய வகுப்புக்கள் திறக்கப்படும். இந்நிலையில் நாட்டிலுள்ள பாலர் பாடசாலைகளை ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வகுப்பறைகள் திறக்கப்படுவதற்கு முன்னர் கிருமி தொற்று நீக்கம் செய்யப்படும். குறித்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சுக்கும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை தேசிய கல்வியற் கல்லூரிகளில் இரண்டாம் வருட பயிற்சியாளர்களுக்கான வதிவிட கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 7 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 31 ம் திகதி வரை கல்வி நடவடிக்கைகள் தொடரும் நாட்டிலுள்ள சகல கல்வியற் கல்லூரிகளிலும் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜுலை மாதம் 7 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.