வைரஸ் தொற்றால் கடுமையான பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடத்திலுள்ளது. அந்நாட்டில் 2 லட்சத்து 98 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், 8 ஆயிரத்து 501 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் அந்நாட்டில் புதிதாக 11 ஆயிரத்து 128 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்தியாவில் நோயாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் மருத்துவமனைகள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிகளவான நோயாளர்கள் சிகிச்சையின்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய கணக்கெடுப்பின் படி ஜுலை மாதத்திற்குள் தலைநகர் புதுடில்லியில் மாத்திரம் சுமார் 5 இலட்சம் பேர் நோயால் பாதிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.