நாட்டை முழுமையாக அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதியின் நோக்கமென ஜனாதிபதி சட்டதரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாதாண்டிய கொட்டாராமுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே ஜனாதிபதியின் நோக்கமாக உள்ளது நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொய் பேசும் மனிதர் அல்ல என்பதை உங்கள் முன்னிலையில் ஆணித்தனமாக கூறுகின்றேன். நேர்மை தொடர்பாக எவ்வித சந்தேகமும் கொள்ள தேவையில்லை. இவ்வாறானவர்கள் நாட்டுக்கு கிடைப்பது அதிஷ்டமாகும். இவ்வளத்தை பயன்படுத்த வேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு நீங்கள் ஆதரவு வழங்குங்கள்.”என தெரிவித்தார் .
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=AuVGzjjoG2s&feature=youtu.be&fbclid=IwAR0oOvOKuTCFb-AF51MwDHEv5P8q5TxDVwWeibRCezQupuE1OjzE4noiGzk”]