வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற வானிலை தொடர்கிறது. ஒரு சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை ஊடாக ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக புத்தளம் வரையான கரையோரப் பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் இருக்கவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.