இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. அவருக்கெதிராக ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குறித்தான விடயம் தொடர்பிலேயே இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.