அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் குறித்த பிரதேசத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் அவுஸ்திரேலியாலில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அனர்ததத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதியில் மீட்புபணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை வெள்ள அனர்த்தத்தையடுத்து சுமார் 100 க்கு மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.