நிலவும் வரட்சியான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பது குறித்தான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அதுதொடர்பான விசேட கலந்துரையாடலொன்றும் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. வரட்சியான வானிலை காரணமாக சிறுகுழந்ததைகள் மற்றும் முதியவர்கள், நீண்டகால இதய நோய்க்குள்ளானவர்கள், வெட்டவெளியில் தொழில் புரிவோர் என அதிகளவானோர் பாதிக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது.
அதிக வெப்பம் காரணமாக இதய நோய், நுரையீரல் நோய் போன்றவையும் அதிகரிக்குமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிக உஷ்ணம் காரணமாக இதய பதற்றம், தசைப் பிடிப்பு, மயக்கம் போன்றவையும் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அடிக்கடி தண்ணீர் பருகுதல், பானங்களை பருகுதல், அதிக வெப்பமான காலநிலை நிலவும் நேரங்களில், குடையைப் பயன்படுத்துதல், அதேபோல் உடலுக்கு இலகுவான பருத்தி ஆடைகளை அணிதல் உள்ளிட்டவற்றை செயற்படுத்துமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. தேவை ஏற்படின் மருத்துவ சிகிச்சைகளை பெறுமாறும் அறிவுறத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பமான வானிலையினால் ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் ஏற்படுமெனின் 0710 107 107 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி சுகாதார பிரிவுக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுள்ளது.