கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே கொழும்பு மேலதிக நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.