நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் தட்டம்மை நோய்த்தாக்கத்தினால் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு வாரத்திற்குள் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வடகிழக்கிலுள்ள அடமாவா பிரதேசத்தில் தட்டம்மை நோயாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட 200 நோயாளர்களில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக நைஜீரிய சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த பகுதிக்கு தட்டம்மை தடுப்பூசிகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக மாநிலத்தின் சுகாதார ஆணையாளர் பிலீக்ஸ் டங்வாமி தெரிவித்துள்ளார்.
தொற்று நோய்களில் ஒன்றான தட்டம்மை காற்றில் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தட்டம்மை நோயினால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெறுவதன் ஊடாக தட்டம்மை நோயிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.