தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 2023ம் ஆண்டு ஜனாதிபதியினால் அவர் வடமேற்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நஷீர் அஹமட் வடமேற்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ளார். கடந்த வருடம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கமைய நஷீர் அஹமட் தமது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த நிலையில் அவர் சுற்றாடல் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
கட்சியின் ஒழுக்கத்தை மீறியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக தீர்ப்பு வெளியானதால் நஷீர் அஹமட் கட்சி உறுப்புரிமையை இழந்தார்.
இதனால் அவருக்கான பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டதுடன் அமைச்சுப் பதவியும் இல்லாமல் போனது.
இதேவேளை இரு புதிய ஆளுநர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.