ஐந்து வருடங்களாக தும்பர போகம்பர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதியொருவர் மின் விளக்கை நசுக்கி அதன் பாகங்களை விழுங்கியதால் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்பளையை சேர்ந்த 42 வயதான குறித்த நபருக்கு 2022 டிசம்பரில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைக்காவலர்கள் இருவர் தன்னை அறையொன்றுக்கு அழைத்துச் சென்று கையடக்கத் தொலைபேசி இருக்கிறதா எனக் கேட்டு அடித்ததாகவும், அப்போது அறையில் இருந்த டியூப் பல்பை உடைத்து அதன் பாகங்களை விழுங்கியதாகவும் குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வயிற்றில் வீக்கத்துடன் கடுமையான வலி ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட நபரை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.