தோட்டத்தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் ஈ.டி.எப் மற்றும் ஈ.பி.எப் நிலுவை கொடுப்பனவுகளை செலுத்துவதற்கென அமைச்சரவை பத்திரமொன்றை இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சுமார் 5 பில்லியன் ரூபா நிலுவை கொடுப்பனவாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல சீர்த்திருத்தங்களுக்கு முன்னர் இதனை மேற்கொள்வது அவசியமாகும்.
தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைவதற்கு அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு செலுத்த வேண்டிய 500 கோடி ரூபா கொடுப்பனவு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இதற்காக தோட்ட மக்கள் பல வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர். எனினும் அவர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.