தொடங்கொட புஹபுகொட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற சூதாட்ட மைதானத்தில் வைத்து ஒரே இலக்கம் கொண்ட நான்கு 5 ஆயிரம் போலி நாணயத்தாள்களை கண்டெடுத்துள்ளதுடன் அதனை தம்மிடம் ஒப்படைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.