உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளோ இதுவரை பதிவாகவில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மழையுடன் ஏற்படும் சிறிய நீரூற்றுக்களை காண்பித்து மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக மின்சக்தி மற்றும் வல சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் நீர்க் கசிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று நாளை (01) அப்பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மேலும் தெரிவித்தார்.