வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்களாக செல்லும் இந்தியர்கள் அடிமைகளாக விற்பக்கப்படுவதை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஆடுஜீவிதம் மலையாள திரைப்படம் வெளியாகி ஒருவாரத்தில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
அடிமையாக விற்கப்படும் கதாபாத்திரத்தில் இந்திய நடிகர் ப்ருத்திவிராஜ் நடித்துள்ளார். நஜீப் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள ப்ருத்திவிராஜ் புலம்பெயர் தொழிலாளியாக சவுதி அரேபியாவிற்கு செல்வதுடன் அங்கு அவர் ஆடு மேய்க்கும் தொழிலுக்கென அடிமையாக விற்கப்படுகின்றார்.
தொழிலுக்காக சென்ற நஜீப் இந்த நிலைமையால் உலகிலிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றார். அவரது எஜமான் மற்றும் அவரின் கால்நடைகளுடன் பாலைவனத்தில் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு வழங்கப்படும் நீரையே நஜீப் குடிக்க வேண்டிய நிலை உள்ளது.
அசாதாரணமான வெப்பம், போதிய உணவின்மை, உரையாடுவதற்கு ஆட்கள் இல்லை, எந்தவித தொலைத்தொடர்பு வசதியும் இல்லாமை போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் படத்தின் கதாநாயகன் அந்த துயரத்திலிருந்து அவர் எவ்வாறு தப்பிபிழைக்கின்றார் என்பதே மிகுதி கதையாகும்.
Blessy படத்தை இயக்கியுள்ளார். ப்ருத்திவிராஜ் உடன், அமலாபோல், ரிக் அபி, ஜிம்மி ஜீன் லுயிஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த கதைக்கு உயிர்கொடுத்து பிரம்மிக்க வைக்கும் வகையில் திரைக்கதை அமையப்பெற்றுள்ளது. அத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மிருகத்தனமாக போராட்டத்தின் சினிமா சித்தரிப்பு இந்த ஆடுஜீவிதம்.
3 மணித்தியால திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திற்குள் 870 மில்லியன் இந்திய ரூபாவை வசூல் செய்துள்ளது. இந்த திரைக்காவியம் 2008ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான புத்தகமொன்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2.1 மில்லியன் கேரள மக்களில் 90 வீதமானவர்கள் வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்களாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.