ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற 25 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணிக்கு எதிராக போட்டி வான்கடேயில் இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களுர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் பெப் டூ பிளசீஸ் 61 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
197 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 15.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கையடைந்தது. இஷான் கிஷான் 69 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 19 பந்துகளுக்கு முகம்கொடுத்து 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இம்முறை ஐபி.எல் தொடரில் பெங்களுர் அணி இதுவரை 6 போட்டிகளுக்கு முகம்கொடுத்து அதில் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.
மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி இரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய தினம் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. போட்டி லக்னோவில் இடம்பெறவுள்ளது.